டெல்லியை உலுக்கிய பெண் இறப்பு விவகாரம்... பிரேத பரிசோதனையில் வெளியான பரபரப்பு தகவல்

Update: 2023-01-03 14:47 GMT

ஜனவரி 1 ஆம் தேதி அதிகாலையில் காரில் பல கிலோமீட்டர்கள் இழுத்துச் செல்லப்பட்ட டெல்லி பெண்ணின் பிரேத பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை செய்ததற்கான அடையாளங்கள் இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில், புத்தாண்டு தினத்தன்று, இருசக்கர வாகனத்தில் சென்ற அஞ்சலி என்ற இளம்பெண், 12 கிலோமீட்டர் தூரம் வரை, காரில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் டெல்லியை உலுக்கியிருக்கிறது. உயிரிழந்த இளம்பெண்ணின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பாலியல் வன்கொடுமை செய்ததற்கான காயங்கள் இல்லை என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து காவல் உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தி வரும் நிலையில், காவல்துறையினர் அலட்சியமாக இருந்துள்ளனரா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்