"மலக்குழி மரணம் குறித்த அக்கறையை மத பிரச்னையாக்கி விட்டனர்" -இயக்குனர் பா.ரஞ்சித் ஆவேசம்

Update: 2023-05-10 02:59 GMT

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மலக்குழி மரணங்களைக் கண்டும் காணாமல் போகும் சமூக நிலையைச் சுட்டிக்காட்டுவதற்காக, கடவுள் ஸ்தானத்தில் இருப்பவர்கள் அத்தகைய வேலையைச் செய்து மரணத்தைத் தழுவினாலாவது கவனம் பெறுமோ என்கிற பொருளில் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பின் கவிதை இருந்தது என்று கூறினார். ஆனால் அவருக்கு எதிராக இணையத்தில் சில குழுக்கள் தொடர்ந்து செய்து வந்த பொய் பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக, அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.ஒரு படைப்பின் மையப்பொருளை விளங்கிக்கொள்ளாமல் அல்லது விளங்கிக்கொள்ள விரும்பாமல் படைப்புச் சுதந்திரத்திற்கு எதிராகத் தொடுத்த வழக்கைப் பதிவு செய்திருக்கும் காவல்துறை மற்றும் தமிழக அரசின் செயல் கண்டிக்கத்தக்கது என்றும் அந்த அறிக்கையில் பா.ரஞ்சித் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்