மனைவி போல் நடித்து கணவன் செய்த பகீர் காரியம் - பெரும் சிக்கலில் மாட்டிய மனைவி

Update: 2022-12-11 05:44 GMT

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே, தனது கையெழுத்தை போலியாக போட்டு கடன் வாங்கி மோசடி செய்த கணவன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி, மனைவி, காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். பண்ருட்டியை சேர்ந்த சூர்யா என்ற பெண்ணிற்கு 2 குழந்தைகள் உள்ளன. தனது கணவர் அருள்பிரகாசம் என்பவருக்கு, பல பெண்களிடம் தொடர்பு இருந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக, 2 ஆண்டுகளாக அவரைபிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில், தனியார் நிதி நிறுவனத்தில் மனைவியின் கையெழுத்தை போட்டு, அருள்பிரகாசம் 10 லட்சம் ரூபாய் கடன் வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விவகாரம் சூர்யாவுக்கு தெரியவரவே, கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்