மீண்டும் பிரிட்டன் தேர்தல் களத்தில்... இந்திய வம்சாவளி ரிஷி சுனக் மக்களிடையே பெருகும் ஆதரவு

Update: 2022-10-24 03:07 GMT

மீண்டும் பிரிட்டன் தேர்தல் களத்தில்... இந்திய வம்சாவளி ரிஷி சுனக்மக்களிடையே பெருகும் ஆதரவு

இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது எழுந்த அதிருப்தியை தொடர்ந்து நடைபெற்ற பிரதமர் தேர்தலில் ரிஷி சுனக்கை தோற்கடித்து, லிஸ் டிரஸ் பிரதமராக பொறுப்பேற்றிருந்தார். ஆனால் தற்போது அவரும் தனது பிரதமர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து, இங்கிலாந்தில் மீண்டும் பிரதமர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இம்முறை இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் வெற்றி பெற அதிக வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. இந்நிலையில், தற்போது மிக மோசமான பொருளாதார நெருக்கடியால் தவித்து வரும் பிரிட்டனில், நிலைமையை சரி செய்ய தனக்கு வாய்ப்பு வழங்குமாறு கட்சி உறுப்பினர்களின் ஆதரவு கோரி, ரிஷி சுனக் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதன் மூலம் இம்முறையும் பிரதமர் பதவிக்கு ரிஷி சுனக் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது

Tags:    

மேலும் செய்திகள்