#BREAKING || கரூர் ஐடி ரெய்டு - அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு

Update: 2023-05-27 02:35 GMT

கரூரில் நேற்று சோதனை நடத்த வந்த வருமான வரித்துறை அதிகாரிகளை தடுத்த நபர்கள் மீது வழக்கு பதிவு

அரசு அதிகாரிகளை பணி செய்ய விடாமல் தடுத்தல், அனுமதி இன்றி 5-க்கும் மேற்பட்ட நபர்கள் ஒன்று கூடுதல், பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு

அடையாளம் தெரியாத நபர்கள் மீது வழக்கு பதியப்பட்டுள்ளதாக கரூர் மாவட்ட காவல்துறை தகவல்

கரூர் ராமகிருஷ்ணாபுரத்தில் நேற்று ஐ.டி. ரெய்டு நடத்த வந்த அதிகாரிகள் முற்றுகை, கார் கண்ணாடி உடைப்பால் பரபரப்பு நிலவியது

4 வருமான வரித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை வழக்குப்பதிவு

Tags:    

மேலும் செய்திகள்