அமைச்சரவை கூட்டத்தில் அதிரடி மசோதா - ஹேக்கர்களுக்கு இனி பெரும் கஷ்டம்!

Update: 2023-07-06 04:10 GMT

பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், டிஜிட்டல் தரவுகள் பாதுகாப்பு மசோதாவிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது

தனிநபர்களின் தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதற்கான உரிமை, அதனை பாதுகாக்கும் விதத்தில் டிஜிட்டல் தனிப்பட்ட தரவை செயலாக்குவது, இந்த வரைவு மசோதாவின் நோக்கம் எனவும் இந்தியாவில் டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்பை நிர்வகிக்கும் விரிவான சட்ட கட்டமைப்பை நிறுவும் எனவும் கூறப்பட்டுள்ளது. டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வரும் நாடாளுமுன்ற மழைக்கால கூட்டத்தொடரில், சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்ற திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளிகாகியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்