ஓடும் பேருந்தில் திடீரென மளமளவென பரவிய தீ - பரபரப்பு காட்சிகள்

Update: 2022-10-01 05:07 GMT

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் மாநகராட்சி பேருந்து திடீரென தீ பிடித்து எரிந்த‌தால் பரபரப்பு ஏற்பட்டது. நலா சோபரா பகுதியில் சென்று கொண்டிருந்த மாநகராட்சி பேருந்து 16 பயணிகளுடன் சென்ற பேருந்து ஒன்றில் கரும்புகை வெளியேறியது. தீ மளமளவென பரவியதால் பேருந்து முழுவதும் எரிந்து நாசமானது. உடனடியாக பயணிகள் வெளியேறியதால், அனைவரும் காயமின்றி தப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்