ஒரே இளைஞரை காதலித்த 15 வயது இரட்டையர்கள்.. 2 சகோதரிகளையும் விட முடியாத காதலன்.. மூவரும் சேர்ந்து செய்த பகீர்.. பறிபோன ஒரு உயிர்

Update: 2023-06-08 06:13 GMT

திருவாலங்காடு அருகே ஒரே இளைஞரை இரட்டை சகோதரிகள் காதலித்த விவகாரத்தில், மூவரும் தற்கொலைக்கு முயன்ற நிலையில், சிறுமி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

திருவள்ளூர் மாவட்டம் ஒரத்தூர் பகுதியை சேர்ந்த 15 வயதான இரட்டை சகோதரிகள், தங்களது உறவினரான மகேஷ் என்பவரை காதலித்தாக கூறப்படுகிறது. அவரும் சகோதரிகள் இருவரையும் காதலித்ததாக கூறப்படுகிறது. இவர்களது காதலை இரு வீட்டாரும் எதிர்த்தாக தெரிகிறது. இதனையடுத்து மூவரும் கொசஸ்தலையாறு அருகே, கொக்கு மருந்து சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளனர். மயங்கி கிடந்த மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்கொலைக்கு முயன்ற சிறுமிகளில் ஒருவர் உயிரிழந்தார். மற்றொரு சிறுமிக்கும் மகேஷுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Tags:    

மேலும் செய்திகள்