"பிபிசி அலுவலகங்களில் சர்வே - சந்தேகத்தை ஏற்படுத்துகிறது" - கேரள முதலமைச்சர் குற்றச்சாட்டு

Update: 2023-02-15 01:52 GMT

பிபிசி அலுவலகங்களில் வருமான வரித்துறையின் சர்வே, சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது என கேரள முதலமைச்சர் கருத்து தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வரித்துறையின் ஆய்வு நடவடிக்கைகள், அந்த நிறுவனத்தின் மீதான நேர்மை மிகவும் கேள்விக் குறியாகியுள்ளதாக கூறியுள்ளார்.

இது சர்வதேச சமூகத்தின் முன் நாட்டை சங்கடப்படுத்தும் என கூறியுள்ள பினராயி விஜயன், பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரான எந்த தவறான நடவடிக்கையும் ஆட்சேபனைக்குரியது என தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்