நீடிக்கும் உக்ரைன்-ரஷ்யா போர்... பலப்படுத்தப்பட்ட உக்ரைனின் பாதுகாப்பு அரண்கள் - ராணுவ வீரர்களை பாராட்டிய அந்நாட்டு அதிபர்

Update: 2024-03-28 14:34 GMT

உக்ரைனின் வடகிழக்கு பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அரண்களை அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி பார்வையிட்டார். உக்ரைன்-ரஷ்யா போர் நீடிக்கும் நிலையில், சுமி பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள போர்முனைகள், பதுங்கு குழிகளை செலன்ஸ்கி ஆய்வு செய்தார். தொடர்ந்து ராணுவ வீரர்களுடன் கலந்துரையாடிய செலன்ஸ்கி, சிறப்பாக பணியாற்றிய ராணுவ வீரர்களுக்கு பதக்கங்கள் வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்