தன்னை கத்தியால் குத்திய சிறுவன்.. கடவுள் ஏசுவாக மாறிய பாதிரியார்.. பிரமித்த உலகம்

Update: 2024-04-18 06:54 GMT

#priest #australia #jesuschrist

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் தன்னைக் கத்தியால் கொடூரமாகக் குத்திய சிறுவனை பெருந்தன்மையுடன் மன்னித்துள்ளார் பாதிரியார் ஒருவர்...

Vovt

மேற்கு சிட்னியில் உள்ள அசிரிய கிறிஸ்தவ தேவாலயத்தில் பாதிரியார் மார் மாரி இம்மானுவேலை 16 வயது மதிக்கத்தக்க சிறுவன் கொடூரமாகக் கத்தியால் குத்திய நிலையில், தற்போது தான் குணமடைந்து வருவதாக பாதிரியார் தெரிவித்துள்ளார்... மேலும், நீ என் மகன்... நான் உன்னை நேசிக்கிறேன்... உனக்காக நான் எப்போதும் ஜெபிப்பேன்... இதைச் செய்ய உன்னை அனுப்பியவர்களையும் நான் மன்னிக்கிறேன்... என பாதிரியார் மார் மாரி இம்மானுவேல் ஏசுவைப் போல் பெருந்தன்மையுடன் தெரிவித்துள்ளார்... இச்சம்பவம் தொடர்பாக மேலும் ஒரு 19 வயது இளைஞர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பலர் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்