பாலைவன பூமியில் கொடூர வெள்ளம்.. மூழ்கிய துபாய், ஓமன் ஏர்போர்ட்.. 18 பேர் கோர மரணம்.. ரெட் அலர்ட்

Update: 2024-04-17 07:17 GMT

ஓமன் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில், பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. துபாய், அல் ஐன், புஜைரா உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பல இடங்களில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. வணிக வளாகங்களில் மழைநீர் புகுந்த‌தால் பொருட்கள் சேதமடைந்துள்ளன. விமான நிலையங்களில் ஓடுபாதைகள் முழுவதும் வெள்ள நீரால் சூழ்ந்துள்ளதால், விமான போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளன. தனியார் துறையிலும் தேவைப்பட்டால் வீட்டிலிருந்து பணி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஓமனில் ஏற்கனவே பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், கனமழையால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 18 ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் வெள்ளத்தில் த‌த்தளித்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்