"துபாயில் ஆடம்பர மாளிகையை வாங்கினார் அம்பானி"- ரூ. 1,350 கோடிக்கு மாளிகையை வாங்கியதாக தகவல்

Update: 2022-10-20 14:22 GMT

"துபாயில் ஆடம்பர மாளிகையை வாங்கினார் அம்பானி"- ரூ. 1,350 கோடிக்கு மாளிகையை வாங்கியதாக தகவல்

துபாயில் ஆயிரத்து 350 கோடி ரூபாய்க்கு தொழில் அதிபர் அம்பானி ஆடம்பர மாளிகையை வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜுமேரா தீவில் உள்ளூர் தொழில் அதிபர் முகமது அல்சயாவிடம் இருந்து ஆடம்பர மாளிகையை அம்பானி கடந்த வாரம் வாங்கியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

சமீபத்தில் இதே தீவில்தான் அம்பானி தனது இளைய மகன் ஆனந்திற்கு 640 கோடி ரூபாய்க்கு ஆடம்பர பங்களாவை வாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Tags:    

மேலும் செய்திகள்