மயங்கி விழுந்த குத்துச்சண்டை வீராங்கனை... இரண்டு முறை மயங்கியதால் பரபரப்பு

அமெரிக்காவில் நடந்து வரும் குத்துச்சண்டை தொடரில், பிரபல வீராங்கனை 2 முறை மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2021-03-20 12:26 GMT
அமெரிக்காவில் நடந்து வரும் குத்துச்சண்டை தொடரில்,  பிரபல வீராங்கனை 2 முறை மயங்கி விழுந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. லித்துவேனியா நாட்டை சேர்ந்த ஜுலிஜா ஸ்டோலியரென்கோ, ஆட்டம் ஆரம்பிப்பதற்கு முன்பாக, எடை சரிபார்க்கும்போது மயங்கினார். இதனைத் தொடர்ந்து அவர், அமர வைக்கப்பட்ட நிலையில், மீண்டும் எடை பரிசோதனையின்போது, இரண்டாவது முறையாக மயங்கி விழுந்தார். தொடர்ந்து, போட்டியை நடத்தும் அமைப்பினர் அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்