பல்கலை. வாயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற முயற்சி - மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு

இலங்கையிலுள்ள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-11-29 19:52 GMT
இலங்கையிலுள்ள, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயிலில், கார்த்திகை தீபம் ஏற்ற முயன்ற மாணவர்களை போலீசார் தடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீபம் ஏற்ற விளக்குகளுடன் மாணவர்கள் தயாராக இருந்த நிலையில், போலீசாரும், ராணுவத்தினரும் அங்கு விரைந்து வந்து மாணவர்களை தடுத்தனர். மேலும், தங்கும் விடுதிகளில் தீபங்களை ஏற்றுமாறும், மீறினால் கைது செய்யப்படுவீர்கள் என்றும் மாணவர்களை எச்சரித்தனர். இதையடுத்து, யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வாயில் மூடப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்