SETC அரசு பஸ்களில் புக்கிங் செய்து பாதி டிக்கெட்டில் பயணம் செய்யலாம்.. அதுக்கு ஒரு சின்ன ட்ரிக் இருக்கு..!
அரசு விரைவு பேருந்துகளில் கடந்த 3 மாதங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகளுக்கு 2.24 லட்ச ரூபாய் வரை பயணக் கட்டணத்தில் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் விரைவுப் பேருந்துகளில் தொடர்ச்சியாக பயணம் செய்பவர்களை ஈர்க்கும் வகையில், ஒரு மாதத்தில் 5 முறைக்கு மேல் பயணம் செய்வோருக்கு, 6-ஆவது பயணம் முதல் 50 சதவீத கட்டணச்சலுகை வழங்கும் திட்டம், கடந்த மே மாதம் அறிமுகம் செய்யப்பட்டது. அந்த திட்டத்தின்கீழ் கடந்த மே மாதம் 300 பேர், ஜூன் மாதத்தில் 493 பேர், ஜூலை மாதத்தில்211 பேர் என மொத்தம் ஆயிரத்து 4 பேர், 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் வரை கட்டண தள்ளுபடி பெற்றுள்ளனர். இந்த தள்ளுபடி திட்டம் மூலம், விரைவு பேருந்துகளில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்து வருவதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.