கள்ளக்குறிச்சி கலவர விவகாரம் | குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு

Update: 2022-08-27 02:04 GMT

கள்ளக்குறிச்சி கலவர விவகாரம் | குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவு


கனியாமூர் கலவரத்தில் கைது செய்யப்பட்டு திருச்சி, வேலூர் சிறையில் உள்ள 41 பேரின் நீதிமன்ற காவல் 2ஆவது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் நிகழ்ந்த கலவரம்

தொடர்பாக, கடந்த 17ஆம் தேதி கைது செய்யப்பட்ட 41 நபர்களில், திருச்சி சிறையில் 37 பேரும், வேலூர் சிறையில் நான்கு பேரும் அடைக்கப்பட்டனர். அவர்களின் நீதிமன்ற காவல்

நிறைவடைய உள்ள நிலையில், செப்டம்பர 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து கள்ளக்குறிச்சி இரண்டாவது குற்றவியல் நடுவர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்