கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த நடத்துனர்

Update: 2022-10-18 12:42 GMT

கல்லூரி மாணவர்கள் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் - காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த நடத்துனர்

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அருகே, படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணித்ததை தட்டிக் கேட்ட அரசுப் பேருந்து நடத்துனரை கல்லூரி மாணவர்கள் தாக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

அச்சமடைந்த நடத்துநர், பேருந்தை நிறுத்தி விட்டு, காவல்நிலையத்தில் தஞ்சமடைந்தார்.

இதனைத் தொடர்ந்து பேருந்து நிலையம் வந்த போலீசார், மாணவர்களை எச்சரித்ததுடன், அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்