"எல்லாம் சரியா இருக்கா.." - தனியார் பள்ளி பேருந்தை ஓட்டி பார்த்த ஆட்சியர்

Update: 2024-05-09 13:42 GMT

கள்ளக்குறிச்சியில், தனியார் பள்ளி வாகனங்கள் குறித்த ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியர் ஷ்வரன் குமார், ஒரு பேருந்தை தானே ஓட்டி பார்த்து ஆய்வு செய்தார்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பள்ளிப்பேருந்துகள் குறித்த ஆய்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கள்ளக்குறிச்சியில் உள்ள தனியார் பள்ளிகளின் பேருந்துகளை மாவட்ட ஆட்சியர் ஷ்வரன்குமார் ஆய்வு செய்தார். அப்போது, ஒரு பேருந்தை தானே, சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை ஓட்டி சென்று, அதன் பாதுகாப்பு தன்மையை சரிபார்த்தார்.

Tags:    

மேலும் செய்திகள்