பிரதமர் பாதுகாப்புக்காக தயாராகி வந்த தமிழக ராணுவ வீரர் அகால மரணம்.. இறக்கும் முன் அனுப்பிய செல்பி

Update: 2023-08-17 08:50 GMT

கன்னியாகுமரியில் கடைசி தருவாயில் தனது மனைவியிடம் அன்பை பகிர்ந்துவிட்டு, பிஎஸ்எஃப் வீரர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தக்கலை அருகே கிருஷ்ணபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஸ். டெல்லியில் எல்லை பாதுகாப்பு படை வீரராக உள்ள இவருக்கு, சந்தியா என்ற மனைவியும், 4 வயதில் ஒரு மகனும் உள்ளனர். மேலும் சந்தியா தற்போது 7 மாத கர்ப்பிணியாகவும் உள்ளார். இந்நிலையில், பிரதமர் பாதுகாப்பு பணிக்காக ஜெகதீஸ் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். அப்போது திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த ஜெகதீஸ், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இறப்பதற்கு முன், மனைவியுடன் கடைசியாக, எடுத்த செல்ஃபியை மனைவிக்கு அனுப்பி, தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்