மருத்துவர்கள் அலட்சியம் - கர்ப்பிணி பெண் உயிரிழப்பு

நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

Update: 2019-04-27 02:29 GMT
நெல்லை மாவட்டம் உக்கிரன்கோட்டையில் மருத்துவர்களின் கவனக்குறைவால் கர்ப்பிணி பெண் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்குள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று அதிகாலை மூன்று மணியளவில் செல்வி என்பவருக்கு அறுவை சிகிச்சையின் மூலம் இரண்டாவது குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவருக்கு அதிக ரத்தபோக்கு ஏற்பட்டுள்ள நிலையில், சுமார் 12 மணி நேரத்திற்கு பிறகு, அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இதில் வழியில் அந்த பெண் பரிதாபமாக உயிரிழந்தார். இதனால், மருத்துவர்களின் அலட்சிய போக்கை கண்டித்து, செல்வியின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்