விசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...

விசாரணைக்கு பயந்து காவலர் தற்கொலை முயற்சி...

Update: 2019-02-08 23:27 GMT
வழிப்பறி தொடர்பான புகாரில் விசாரணைக்கு அழைத்ததால், எண்ணூர் காவல் நிலைய காவலர் சுரேஷ் குமார் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையை அடுத்த எண்ணூர் அனல்மின் நிலைய குடியிருப்பு வளாகம் அருகே மயங்கிய நிலையில் கிடந்த காவலர் சுரேஷ்குமாரை பார்த்த பொதுமக்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர், விரைந்து வந்த போலீசார் காவலர் சுரேஷ் குமாரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்