விஜயபிரபாகரனை ஆதரித்து சிவகாசியில் பட்டாசாக வெடித்த எடப்பாடி

Update: 2024-03-29 02:12 GMT

விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி சிவகாசியில் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் பட்டாசு தொழிலை பாதுகாக்க தி.மு.க. அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என குற்றம்சாட்டினார். கூட்டணி வைப்பவர்களை கைதூக்கி விடுவது அதிமுகவின் பண்பு என்றும் அதிமுகவை அழிக்க முற்பட்டவர்கள் அடையாளம் தெரியாமல் போய் விட்டதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலினும், அமைச்சர் உதயநிதியும் எங்கும் தன்னை பற்றியே பேசி வருவதாக எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டினார். விஜய பிரபாகரனை

நல்ல மகனாக விஜயகாந்த் வளர்த்துள்ளதாகவும், விஜயபிரபாகரனை வெற்றிபெற செய்ய வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்