"உங்கள் மரணத்திற்கு பிறகும் கூட.." - எச்சரிக்கும் மோடி.. காங். மீது பாய்ச்சல்

Update: 2024-04-24 09:32 GMT

வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் கொள்ளையடிப்பதே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம் என பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். அதில், ஒட்டுமொத்த காங்கிரஸ் கட்சியை தங்களின் முன்னோர்களின் சொத்து எனக் கருதி, அதனை தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கியதாகவும், அவர்கள் இந்தியர்கள் தாங்கள் சம்பாதித்த சொத்துக்களை தங்களின் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடாது என நினைப்பதாகவும் குற்றம் சாட்டினார். மேலும் வாழும்போதும், வாழ்க்கைக்குப் பிறகும் கொள்ளையடிப்பதே காங்கிரஸ் கட்சியின் தாரக மந்திரம் என்றும், தங்களது செயல்பாடுகளால் காங்கிரஸ் கட்சி மக்களிடம் நம்பிக்கையை இழந்து விட்டதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்