EVM விவகாரம்... உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு...ஜெய்ராம் ரமேஷ் முக்கிய கருத்து

Update: 2024-04-26 12:29 GMT

தேர்தல் நடைமுறையில் மக்களின் நம்பிக்கையை அதிகரிப்பதற்கான எங்களின் அரசியல் பிரச்சாரம் தொடரும் என்று, காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ் தெரிவித்துள்ளார். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அல்லாமல் வாக்குச்சீட்டு அடிப்படையில் தேர்தல் நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், இந்த வழக்கில் காங்கிரஸ் கட்சி நேரடியாகவோ மறைமுகமாகவோ மனுதாரராக இல்லை என தெரிவித்துள்ளார். இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கிய தீர்ப்பை தாங்கள் கவனத்தில் கொண்டுள்ளதாகவும் ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்