சவுக்கு சங்கர் விவகாரம்.. ஈபிஎஸ் போட்ட ட்வீட்

Update: 2024-05-08 05:26 GMT

கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுக்கு சங்கர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், கண்ணை கட்டி பிளாஸ்டிக் பைப்பால் சிறைக் காவலர்கள் தாக்கியதாகவும் அவரது வழக்கறிஞர் கோபாலகிருஷ்ணன் கூறிய தகவல், சமூக வலைதளத்தில் வைரலானது. இந்த தகவலை தமிழக சிறைத்துறை திட்டவட்டமாக மறுத்துள்ளது.

கோவை மத்திய சிறையில் அனுமதிக்கப்பட்டுள்ள எந்த ஒரு சிறைவாசியும் சிறை பணியாளர்களாலோ அல்லது மற்ற சிறைவாசிகளாலோ தாக்கப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ளது.

தமிழ்நாடு சிறைகள் மற்றும் சீர்திருத்தப்பணிகள் துறை சிறைவாசிகளின் பாதுகாப்பு மற்றும் மனித உரிமைகளை பேணுவதிலும், சிறை விதிகளை கடைபிடிப்பதிலும் தீவிர கவனம் செலுத்தி வருகிறது என்றும் செய்திக்குறிப்பு ஒன்றில் சிறைத்துறை தெரிவித்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்