ரங்கசாமியிடம் மிரட்டி கையெழுத்து வாங்கியதா பாஜக? - நாராயணசாமி பரபரப்பு குற்றச்சாட்டு

#rangasamy #bjp #modi

புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்க முதல்வர் ரங்கசாமியை மிரட்டி பாஜக கையெழுத்து வாங்கியுள்ளதாக, முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார். மின்சாரத் துறையை அதானியிடம் ஒப்படைக்க அனுமதிக்காவிட்டால் முதலமைச்சர் பதவியை பறித்து விடுவோம் எனக்கூறி பாஜகவினர் முதலமைச்சர் ரங்கசாமியை மிரட்டி வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தேர்தலில் பாஜகவுக்கு வாக்களிக்கவில்லை என்றால் அரசு மூலமாக வழங்கப்படும் இலவச திட்டங்கள் நிறுத்தப்படும் என மக்களை மிரட்டி 2 பாஜக எம்எல்ஏக்கள் வாக்கு சேகரித்து வருவதாகவும், இதுகுறித்து தேர்தல் ஆணைத்துக்கு புகார் அளிக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

X

Thanthi TV
www.thanthitv.com