பூடான் பிரதமராக பதவியேற்பு.. முதல் என்ட்ரியே இந்தியாவுக்கு தான்.. "பூடான் உடன் இணைந்து இந்தியா..."

Update: 2024-03-16 02:47 GMT

பூடான் பிரதமர் தாஷோ ஷெரிங் டோப்கே குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பூடான் பிரதமராக பதவியேற்ற பிறகு முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியாவிற்கு வந்ததற்காக தாஷோவிற்கு நன்றி தெரிவித்த குடியரசுத்தலைவர், ஆன்மீக பாரம்பரியம் இரு நாடுகளையும் இணைப்பதாக குறிப்பிட்டார். பல்வேறு துறைகளில் பூடான் உடன் இணைந்து பயணிப்பதை இந்தியா போற்றுவதாக குறிப்பிட்ட குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு, பூடானின் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா இருக்கும் என உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்