கோமதி மரண விவகாரம்.. தன் மீது வழக்கு பாய்ந்ததும் அ.மலை கிளப்பிய பகீர்

பாஜக மீது பொய்யான வழக்குகள் தொடுக்கும் திமுக அரசின் ஆட்சிக்காலம், விரைவில் முடிவுக்கு வரும் என, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவில், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்த கோமதியின் உயிரிழப்பை கண்டித்து பதிவிட்டதற்கு, திமுக அரசு தன்மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பலர் தன் மீது வழக்குகள் தொடுத்திருப்பதாகவும், பொய்யான வழக்குகளை தொடுத்து, பாஜகவின் குரல்வளையை நசுக்கி விடலாம் என திமுக அரசு நினைப்பதாகவும் அண்ணாமலை விமர்சித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com