"போலீசைக் கூப்பிடுங்கள்..!" - மனைவியை கொன்றுவிட்டு கணவன் செய்த செயல்

Update: 2024-03-03 15:04 GMT

உத்தர பிரதேச மாநிலம், காஜியாபாத்தில் மனைவியை தாம் கொன்று விட்டதாகக் கூறி போலீசாரை அழைக்குமாறு கணவர் உரக்கக் கத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காஜியாபாத்தில் உள்ள ஹவுசிங் காலனியில், வாடகை குடியிருப்பில் பரத்சிங் என்பவர், தனது மனைவி சுனிதாவுடன் வசித்து வந்தார். இவர் குடும்ப பிரச்சனை காரணமாக, தனது மனைவியை கழுத்தை நெரித்துக் கொன்றதாக கூறப்படுகிறது. வீட்டுக்குள் இருந்து துர்நாற்றம் வரத்தொடங்கியதை அடுத்து, பரத் சிங் தனது வீட்டின் முன் அமர்ந்து, மனைவியை தாம் கொன்று விட்டதாக கூறி அலறத் தொடங்கினார். அந்த வழியாக சென்றவர்களிடம் போலீசை கூப்பிடுமாறு கூறியுள்ளார். இதையடுத்து, அவர்கள் அளித்த தகவலின்பேரில் வந்த போலீசார், சுனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்ததுடன், பரத் சிங்கை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்