நாட்டையே அதிரவைத்த சம்பவம் - ஒரே இடத்தில் 29 பேர் என்கவுண்டர் தனியாத பதற்றம்... தொடரும் வேட்டை..

Update: 2024-04-17 08:13 GMT

நாட்டையே அதிரவைத்த சம்பவம்

ஒரே இடத்தில் 29 பேர் என்கவுண்டர்

தனியாத பதற்றம்... தொடரும் வேட்டை

செய்தி கேட்டு அமித்ஷா கொடுத்த ரியாக்‌ஷன்

சத்தீஸ்கர் மாநிலத்தில் 29 மாவோயிஸ்ட்டுகள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

காங்கெர் மாவட்டத்தில் எல்லைப் பாதுகாப்பு படையினருக்கும், மாவோயிஸ்ட்டுகளுக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 29 மாவோயிஸ்ட் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் இருந்து 7 ஏகே ரக துப்பாக்கிகள் மற்றும் 3 லைட் மெஷின் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்த தாக்குதலில் பாதுகாப்புப் படையை சேர்ந்த மூன்று வீரர்கள் காயம் அடைந்துள்ளனர். மேலும், நக்சல் நடமாட்டம் குறித்து பாதுகாப்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் சத்தீஸ்கர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனிடையே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு படையினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்