வாக்கு பதிவுக்கு பின் சசி தரூர் காரில் இருந்த காங். கொடி திடீர் மாயம்

Update: 2024-04-27 02:12 GMT

வாக்கு பதிவுக்கு பின் சசி தரூர் காரில் இருந்த காங். கொடி திடீர் மாயம்

திருவனந்தபுரத்தில் காங்கிரஸ் எம்.பி. சசி தரூரின் காரில் கட்டப்பட்டிருந்த கட்சிக் கொடி திடீரென்று மாயமானது. திருவனந்தபுரம் தொகுதியில் போட்டியிடும் அவர், காட்டன் ஹில் அரசு மேல்நிலைப் பள்ளியில் தனது வாக்கை பதிவு செய்தார். அவர் திரும்பிச் செல்லும்போது, அவருடைய காரில் கட்டப்பட்டிருந்த காங்கிரஸ்கொடி மாயமாகி இருந்தது. தேர்தல் விதிமுறையை மீறி காரில் கொடி கட்டி வந்ததால், தேர்தல் அலுவலர்கள் அதை அகற்றியதாக கூறப்படுகிறது. அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சசி தரூர், தேசிய அளவில் பாஜகவை எதிர்க்கும் இடதுசாரிகள், கேரளாவில் காங்கிரஸ் கட்சியையும், குறிப்பாக தன்னையும் குறிவைத்து தாக்குவதாக கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்