அரங்கேற போகும் அதிரடி... பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு

Update: 2024-04-25 12:28 GMT

தமிழகத்தில் உள்ள சார்பதிவாளர் அலுவலகங்களை சீரமைப்பது குறித்து பரிசீலனை செய்ய வேண்டியுள்ளதாக பத்திரப்பதிவுத்துறை தெரிவித்துள்ளது. மிக அதிகமாக ஆவணங்கள் பதிவாகும் சார்பதிவாளர் அலுவலகங்களை கண்டறிந்து அதில் உள்ள கிராமங்களை பிரித்து அருகிலுள்ள சார்பதிவகத்துடன் இணைக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. புதிய சார்பதிவாளர் அலுவலகம் தோற்றுவிக்க அவசியம் எழும் நிலையில், அங்கு பதிவாகும் என எதிர்பார்க்கப்படும் ஆவணங்களின் எண்ணிக்கை மற்றும் தேவையான செலவினம் குறித்த விவரங்கள உடனடியாக அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்