`சிறுமி உடல் வாய்க்காலுக்கு வந்தது எப்படி? துணை ராணுவம் இறக்கப்பட்டது ஏன்?' - பகீர் கிளப்பும் சிவா

Update: 2024-03-07 05:28 GMT

சிறுமியின் மரணத்திற்கு தார்மீக பொறுப்பேற்று, புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என எதிர்கட்சித்தலைவர் சிவா வலியுறுத்தியுள்ளார்.

Vovt

இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள அவர், போலீசார் சல்லடடை போட்டு தேடிய சிறுமியின் உடல், வாய்க்காலுக்கு வந்தது எப்படி?, தேடுதல் வளையத்தை கிடுக்கி பிடிக்காமல் காவல்துறை அலட்சியமாக இருந்தது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ளார். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆதரவாக வந்த மக்களின் போராட்டத்தை ஒடுக்க துணை ராணுவத்தை நிறுத்தியது ஏன்? என கேள்வி எழுப்பியுள்ள சிவா, இறந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டியும், இச்சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் பதவி விலக வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்