"திகார் சிறையில் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து?" - பரபரப்பை கிளப்பிய எம்.பி

Update: 2024-04-25 11:20 GMT

சிறையில் உள்ள டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி எம்பி சஞ்சய் சிங் பரபரப்பைக் கிளப்பியுள்ளார். திகார் சிறைச்சாலையில் 2 கைதி குழுக்கள் இடையே நேற்று மோதல் ஏற்பட்டதாக தெரிவித்த அவர், அங்கு ஏற்கனவே பல கொலைகள் நடைபெற்று உள்ளதாகவும், மேலும் கெஜ்ரிவாலின் உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் குறிப்பிட்டார். கெஜ்ரிவாலுக்கு எதிராக சதி வலை பின்னப்படுகிறது என்றும், அவரின் உயிருடன் மத்திய அரசு விளையாடிக் கொண்டிருப்பதாகவும் சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார். மேலும், திகார் சிறைச்சாலையில் கெஜ்ரிவாலுக்கு இதுபோல் ஏதும் நிகழ்ந்தால் அதற்கு யார் பொறுப்பு? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்