"இத்தனை உயிரிழப்புக்கு காரணம் மத்திய அரசின் தவறான முடிவு தான்" - வெடித்த MP திருச்சி சிவா

Update: 2024-02-11 02:57 GMT

மத்திய அரசின் பல்வேறு முடிவுகளால் ஏராளமான மக்கள் இறந்துபோனதாக திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா குற்றம்சாட்டினார். மாநிலங்களவையில் மத்திய அரசின் வெள்ளை அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றிய அவர், பணமதிப்பிழப்பால் வங்கியில் காத்திருந்த நூற்றுக்கணக்கானோர் இறந்து போனதாகவும், வேளாண் சட்டங்களால் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாகவும் சுட்டிக்காட்டினார். ஊரடங்கு உத்தரவால், ஏராளமான புலம்பெயர் தொழிலாளர்கள் உயிரிழந்ததாகவும் திருச்சி சிவா சாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்