இந்தியாவுடன் விரைவில் ஆலோசனை...இலங்கை அமைச்சர் தகவல்

Update: 2024-01-18 09:16 GMT

இலங்கைக் கடற்படையால் இந்திய மீனவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக விரைவில் இந்தியாவுடன் ஆலோசனை நடத்த உள்ளதாக இலங்கை மீன்வளத்துறை அமைச்சர் டக்லஸ் தேவானந்தா கூறியுள்ளார். மன்னார் மாவட்ட மீனவர்களின் பிரச்சினை தொடர்பாக டக்லஸ் தேவானந்தா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அப்போது, மன்னார் கடற்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என இலங்கை கடற்படைக்கு டக்லஸ் தேவானந்தா உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்