உ.பி விவசாயிகள் மீது கார் ஏற்றிய சம்பவம் - ஆஷிஷ் மிஸ்ரா மீது குற்றச்சாட்டு

உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அஜய் மிஸ்ரா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2021-10-06 09:25 GMT
உத்தரப் பிரதேசத்தில் விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே 8 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அஜய் மிஸ்ரா இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்த அவர், காரின் மீது போராட்டக்காரர்கள் கல்லெறிந்ததால், ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கார் கூட்டத்தில் புகுந்து விபத்து ஏற்பட்டதாகவும், சம்பவத்தின் போது தனது மகன் அங்கு இல்லை எனவும் அஜய் மிஸ்ரா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், விவசாயிகள் குறித்து எந்த ஒரு இழிவான வார்த்தைகளும் தான் பேசவில்லை என்று தெரிவித்த அவர், இறந்தவர்களுக்கு தன் இரங்கல்களைப் பதிவு செய்து கொண்டார்.

Tags:    

மேலும் செய்திகள்