நடிகர் விஷால்-லைகா விவகாரம் - விஷால் தரப்பு வைத்த கோரிக்கை

Update: 2024-04-23 14:51 GMT

'விஷால் பிலிம் பேக்டரி' படத் தயாரிப்பு நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனிடம் நடிகர் விஷால் வாங்கிய 21 கோடிய் 29 லட்ச ரூபாய் கடனை, லைகா நிறுவனம் செலுத்தியது. இதையடுத்து விஷால் அந்த பணத்தை திருப்பி செலுத்தவில்லை என லைகா புரொடக்சன்ஸ் நிறுவனம் 2021ல் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கில், இருவருக்கும் இடையே நடைபெற்ற பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ய, ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா என்பவரை உயர்நீதிமன்றம் நியமித்தது. இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணை வந்த நிலையில், ஆடிட்டர் ஸ்ரீகிருஷ்ணா அறிக்கை தாக்கல் செய்தார். ஆடிட்டரின் அறிக்கை குறித்து ஆராய வேண்டியுள்ளதால், விசாரணையை தள்ளி வைக்க வேண்டும் என விஷால் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்ட நீதிபதி, வழக்கின் விசாரணையை ஜூன் 7ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்