ஒப்பந்தத்தை மீறிய விஷால்... உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு | Vishal

Update: 2023-09-19 17:12 GMT

நடிகர் விஷால், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற ரூபாய் 21 கோடி கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு செலுத்தியது.

அந்த தொகை முழுவதையும் திருப்பி செலுத்தும் வரை, விஷால் பட நிறுவனத்தின் அனைத்து படங்களின் உரிமைகளும் லைகா நிறுவனத்துக்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் செய்யப்பட்டது. ஆனால் ஒப்பந்தத்தை மீறி, 'வீரமே வாகை சூடும்' என்ற படத்தை வெளியிடுவதாக விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்தமுறை விசாரணைக்கு வந்தபோது நேரில் ஆஜரான நடிகர் விஷாலிடம், வங்கி கணக்கு மற்றும் சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.

வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தநிலையில், விஷாலின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படவில்லை. இதையடுத்து, செப்டம்பர் 22ம் தேதி நேரில் ஆஜராகும்படி நடிகர் விஷாலுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்