"மெரினா புரட்சி திரைப்படத்தை வெளியிட அனுமதிக்கலாமா?" - ஒரு வாரத்தில் முடிவெடுக்க சென்சார் போர்டுக்கு உத்தரவு

"ஒரு வாரத்தில் முடிவெடுக்க சென்சார் போர்டுக்கு உத்தரவு"

Update: 2019-01-09 13:49 GMT
ஜல்லிகட்டு போராட்டத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட மெரினா புரட்சி திரைப்படத்துக்கு தணிக்கை சான்று வழங்கி, படத்தை வெளியிட அனுமதி கோரி  திரைப்படத்தின் இயக்குநர்  மற்றும் தயாரிப்பாளர் ராஜ் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், படம் தொடர்பான ஆவணங்களை சென்சார் போர்டுக்கு மனுதாரர் சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் படத்திற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஒரு வாரத்தில்முடிவெடுக்க வேண்டும் என சென்சார் போர்டுக்கு உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்