24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது.
24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்
x
24 ஆண்டுகளுக்கு பிறகு காலிறுதிக்குள் நுழைந்த ஸ்வீடன்

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் காலிறுதி சுற்றுக்கு 24 ஆண்டுகளுக்கு பிறகு ஸ்வீடன் அணி தகுதிப் பெற்றுள்ளது. செயின்ட் பிட்டர்ஸ்பர்க் நகரில் நடைபெற்ற இப்போட்டியின் தொடக்கத்தில் சுவிட்சர்லாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது.சுவிட்சர்லாந்து வீரர்கள் கோல் போஸ்ட் பகுதியில் இருந்து, பந்தை கடத்திக்கிட்டு சுவிடன், அவங்களோட எரியாவுக்கு கொண்டு செல்றதோம். அதை சுவிட்சர்லாந்து வீரர்கள் துடக்கறதும்னு ஆட்டம் போய்ட்டு இருந்தது.அப்ப்போ கிடைத்த வாய்ப்பையும் இரு அணி வீரர்களும் கோலா அடிக்க முயற்சி செஞ்சும், கைககூடல. முதல் பாதியில் டல்லா போனாலும்.

ஆட்டத்தோட 66வது நிமிடத்தில் ஸ்வீடன் வீரர் FORSBERG மேஜிக் அவரோட அணியை முன்னிலை படுத்தியது. போட்டியோட ஸ்டாப்பேஜ் டைம்ல, ஆட்டத்தை டிரா செய்ய சுவிட்சர்லாந்து வீரருக்கு ஒரு நல்ல வாய்ப்பை கிடைச்சது. ஆனால் ஸ்வீடன் கோல் கீப்பர் அபாரமா தடுத்தார். ஆட்டத்தோட 94வது நிமிடத்தில் FOUL செய்த காரணத்தால்சுவிஸ் வீரர் லாங்குக்கு ரெட் கார்ட் அளிக்கப்பட்டது. இதனால் கிடைத்த ப்ரீ கீக் வாய்ப்பை ஸ்விடன் கோலா மாற்ற தவறவிட்டாலும், ஸ்வீடன் 1க்கு0 என்ற கோல் கணக்கில் வென்று இருக்கு. காலிறுதிக சுற்றில் ஸ்வீடன் அணி, இங்கிலாந்துடன் மேமாத உள்ளது. 

12 ஆண்டுகளுக்கு பிறகு நாக்-அவுட்டில் வென்ற இங்கிலாந்து


இங்கிலாந்து, கொலம்பியா அணிகள் மோதன ஆட்டம் ஒரு குட்டி ரஸ்லிங் மட்ச் மாதிரியே இருந்தது. இரண்டு வீரர்களும் ஆக்கோரஷமாக விளையாடியதால போட்டியில் அனல் பறந்தது. ஆட்டத்தோட 16வது நிமிடத்தில் இங்கிலாந்து அணி கேப்டன் தலையால் முட்டி ஒரு கோல் அடிக்க முயன்றார். அது கோல் போஸ்ட்க்கு மேல போய் விழுந்துச்சி.ஆட்டதோட முதல் பாதியில் இங்கிலாந்துக்கு நிறைய கார்னர் கிக் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அது கோலாக மாறல. அந்த அளவுக்கு கொலம்பியாவின் டிபன்ஸ் இருந்தது ரெண்டு அணி வீரர்களும் பால் தடுக்குறதுக்கு பதில ஒருவர ஒருவர் தடுக்க முயற்சி செஞ்சாங்க. இந்த மாதிரி ஒரு தப்ப ஆட்டதோட 57வது நிமிடத்தில் நடந்தது. கொலம்பியா வீரர் செய்த தவறால், இங்கிலாந்துக்கு பெனால்டி வாய்ப்பை கிடைச்சது. அதனை கோலாக மாற்றி இங்கிலாந்து கேப்டன் ஹாரி கேன் அசத்தினார்.கொலம்பியா அணியின் நட்சத்திர வீரர் ராட்ரிஜிஸ் காயம் காரணமா இந்தப் போட்டியில் களமிறங்கல. இருந்தாலும் கொலம்பியாவின் உத்வேகத்தை அது தடுக்கல. தங்களுடைய ஆட்டத்தின் வேகத்தை கொலம்பியா அதிகப்படுத்தி அடுத்தடுத்து கோல் அடிக்கம் முயற்சியை மேற்கொண்டாங்க. இதனால 93வது நிமிடத்தில் மினா, ஒரு கோல் அடிச்சி, ஆட்டத்தை சமன் செய்தார். ஆட்டத்தோட கூடுதல் நிமிடத்தில் இரு அணி வீரர்களாலும் கோல் அடிக்க முடியல. இதனால், பெனால்டி சூட் அவுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதுல இங்கிலாந்து 4க்கு3 என்ற கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்று இருக்கு.. 12 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்து அணி நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கு. 







Next Story

மேலும் செய்திகள்