"மேலாடை இல்லாமல்.. உள்ளாடைகளை கழட்டி.." - நொந்துபோன பிரபஞ்ச அழகிகள்

x

'மிஸ் யுனிவர்ஸ்' போட்டியின்போது 20 பேர் முன்னிலையில் மேலாடையின்றி இருக்க சொன்னதாக 6 நாட்டு பங்கேற்பாளர்கள், புகார் அளித்து உள்ளனர்.

இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 3ம் தேதி வரை மிஸ் யுனிவர்ஸ் அழகி போட்டி நடைபெற்றது. அப்போது, 3 ஆண்கள் உட்பட 20 பேருக்கு மேல் உள்ள அறையில், உடல் பரிசோதனை என்ற பெயரில் மேலாடையின்றி செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக 6 போட்டியாளர்கள் குற்றம் சாட்டி போலீசில் புகார் அளித்து உள்ளனர். போட்டியாளர்களின் உடலில் தழும்புகள் அல்லது பச்சை குத்தப்பட்டு உள்ளதா என ஆய்வு செய்ய வேண்டும் என்று கூறி, இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து, ஜகார்தாவில் உள்ள போலீசார், விசாரணை நடத்துவதாக அறிக்கை வெளியிட்டு உள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்