நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 41 பேர் துடிதுடித்து இறந்து போன சோகம்

x

நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து.. 41 பேர் துடிதுடித்து இறந்து போன சோகம்

துருக்கியில் நிகழ்ந்த சுரங்க வெடிவிபத்தில் பலியானோர் எண்ணிக்கை 41ஆக அதிகரித்துள்ளது.

பார்ட்டின் மாகாணத்தின் அமஸ்ரா நகரில் அமைந்துள்ள மிகப்பெரிய நிலக்கரி சுரங்கத்தில் பயங்கர வெடிவிபத்து நிகழ்ந்தது.

இதில் அங்கு பணியாற்றிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.

இந்த விபத்தில் 41 பேர் சடலங்களாக மீட்கப்பட்டனர்.

மேலும் மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. விபத்து நிகழ்ந்த இடத்தை அந்நாட்டு அதிபர் எர்டோகன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

2014 ல், இஸ்தான்புல்லுக்கு தெற்கே 350 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேற்கு நகரமான சோமாவில் நடந்த மோசமான சுரங்க விபத்தில் 301 தொழிலாளர்கள் பலியானது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்