வீட்டு பிரிட்ஜுக்குள் ரகசிய அறை..உள்ளே சென்றவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி

x

பெருநாட்டில், வீட்டிற்குள் ரகசிய அறை அமைத்து, கஞ்சா செடிகளை வளர்த்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கலாவ் நகரில் உள்ள ஒரு வீட்டில் கஞ்சா செடிகள் வளர்க்கப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, போலீசார் அங்கு சோதனை நடத்தினர். அப்போது, வீட்டில் இருந்த பிரிட்ஜ் வழியாக ரகசிய அறைக்கு செல்லும் வகையில் வழி அமைக்கப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, அந்த அறையில் 106 தொட்டிகளில் கஞ்சா செடிகள் பயிரிடப்பட்டிருந்தன. அந்த ரகசிய அறைக்குள், செடிகள் வளருவதற்காக, காற்று, ஒளி உள்ளிட்ட செயற்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. இதனையடுத்து, கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார், கஞ்சா வளர்த்த 39 வயது நபரையும் கைது செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்