பிரசவ வார்டில் 7 குழந்தைகளை வித்தியாச வித்தியாசமாக கொன்ற சைக்கோ நர்ஸ் - உச்சபட்ச தண்டனை வழங்கிய கோர்ட்

x

இங்கிலாந்து மருத்துவமனையில், 7 பச்சிளம் சிசுக்களை கொன்ற செவிலியருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வடக்கு இங்கிலாந்தின் செஸ்டர் பகுதியில் உள்ள குழந்தைகள் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில், கடந்த 2015 மற்றும் 16 ஆம் ஆண்டுகளில், லூசி லெட்பி என்ற செவிலியர் பணியாற்றினார். அந்த காலக்கட்டத்தில் மகப்பேறு பிரிவில், வழக்கத்திற்கு மாறாக அதிக குழந்தைகள் உயிரிழந்தன. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில், லூசி லெட்பி 7 பச்சிளம் குழந்தைகளை கொலை செய்தது தெரியவந்தது. ஊசி மூலம் காற்றை செலுத்துவது, பால் அல்லது திரவத்தை அளவுக்கு அதிகமாக குடிக்க வைப்பது என பல்வேறு முறைகளில் அவர், குழந்தைகளை கொன்றதும், 6 குழந்தைகளை கொல்ல முயற்சித்திருப்பதும் தெரியவந்தது. இந்தநிலையில் இந்த கொடூர கொலைகள் தொடர்பான வழக்கை விசாரித்து வந்த மான்செஸ்டர் கிரவுன் நீதிமன்றம், லூசி லெட்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்