பிரதமர் மோடியிடம் வாக்கு கொடுத்த.. திமோ லெஸ்டே நாட்டின் அதிபர்

x

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினராக திமோ லெஸ்டே நாடு வலுவான ஆதரவு வழங்கும் என, அந்நாட்டு அதிபர் ஜோஸ் ரமோஸ் பிரதமர் மோடியிடம் உறுதி அளித்துள்ளார். குஜராத்தில் நடைபெறும் 10வது வைப்ரேட் மாநாட்டில் பங்கேற்பதற்காக, திமேர் லெஸ்டே நாட்டின் அதிபர் தலைமையிலான குழு இந்தியா வந்துள்ளது. அந்த வகையில் பிரதமர் மோடியுடன் நடைபெற்ற இருதரப்பு பேச்சுவார்த்தையின்போது, அதிபர் ஜோஸ் ரமோஸ் இதனை தெரிவித்தார். மேலும், உலகளாவிய பிரச்சினைகளில் தெற்குலக நாடுகளை ஒருங்கிணைக்கவும் இருவரும் ஒப்புக்கொண்டனர்.


Next Story

மேலும் செய்திகள்