ரஷ்யா அடியால் நிலைகுலைந்த உக்ரைன்..அடுத்தடுத்து விழும் ஏவுகணைகள்..மாயும் உயிர்கள்.. அதிபர் வெளியிட்ட ஷாக் தகவல்

x

உக்ரைனில், அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில், 5 பேர் உயிரிழந்தனர். 31 பேர் படுகாயமடைந்துள்ளனர். உக்ரைனின் டொனெட்ஸ்க் மாகாணத்தில் உள்ள போக்ரோவிஸ்க் நகரத்தில், குடியிருப்பு பகுதி மீது ரஷ்யா அடுத்தடுத்து 2 ஏவுகணை தாக்குதல்களை நடத்தியது. இதில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒரு பகுதி பலத்த சேதமடைந்தது. மேலும், இந்த தாக்குதலில், குடியிருப்புவாசிகள் 5 பேர் கொல்லப்பட்டனர். 31 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப்பணிகள் நடைபெற்று வருவதாக அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்