ஒன்றோடொன்று மோதிய விமானங்கள்... நூலிழையில் உயிர் தப்பிய 379 பயணிகள் - பலியான 5 பேர்

x

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் கடலோர காவல்படை விமானத்துடன் மோதியதில் விமானத்தில் இருந்த 6 பேரில் 5 பேர் கொல்லப்பட்டனர்... கேப்டன் பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்... இந்த விபத்தினால் விமான நிலையத்தின் அனைத்து ஓடுபாதைகளும் மூடப்பட்ட நிலையில், ஹனேடாவிற்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து புறப்படும் 226 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. இதனால் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பயணிகள் பாதிக்கப்பட்டனர். நேற்று 3 ஓடுபாதைகள் மீண்டும் திறக்கப்பட்ட போதிலும், சுமார் 100 விமானங்கள் ரத்து செய்யப்பட வாய்ப்புள்ளதால் 19 ஆயிரம் பயணிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்... விபத்து நிகழ்ந்த ஓடுபாதை மீண்டும் எப்போது திறக்கப்படும் என்று அறிவிக்கப்படவில்லை... இந்த விபத்து குறித்து ஜப்பான் போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணையை தொடங்கியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்