பன்றிக்கு குறி வைத்த மகன்..தந்தையின் தலையில் பாய்ந்த குண்டு - இலங்கையில் பரபரப்பு

x

இலங்கை கேகாலை மாவட்டத்தில் காட்டுப்பன்றியை வேட்டையாட டபிள்யூ சம்பத் என்ற நபர் தனது மகனுடன் சென்றுள்ளார். அப்போது, தந்தையும் மகனும் துப்பாக்கியுடன் காட்டுப்பன்றியை சுற்றி வளைத்து இரு பக்கமாக சென்ற நிலையில், மகன் தவறுதலாக சுட்டதில் தந்தையின் தலையில் குண்டு பாய்ந்துள்ளது. பின்னர், தனது தந்தை உயிரிழந்ததை அறிந்த மகன், உறவினர் ஒருவருடன் போலீசில் சரணடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்